அழுகிய நிலையில் ஆணின் சடலம்! - தமிழர்கள் வாழும் பகுதியில் பயங்கரம்!!
21 மாசி 2026 சனி 07:00 | பார்வைகள் : 3666
தமிழ் மக்கள் செறிந்து வாழும் Aulnay-sous-Bois பகுதியில் உள்ள மலைப்பகுதி ஒன்றில் ஆணின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.
காட்டுக்குள் சென்ற சில இளைஞர்கள் இந்த சடலத்தை கண்டுபிடித்தனர். N2 நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள சிறிய மலைக்குன்று ஒன்றில் இந்த சடலம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை கண்டுபிடித்து, காவல்துறையினருக்கு எச்சரித்தனர். rue du Docteur-Fleming வீதிவழியாகச் செல்லும் பாதையின் ஓரத்தில் இந்த சடலம் கிடந்ததாகவும், முற்றாக அழுகி, நிர்வாணமாக கிடந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாற்பது வயதுடைய குறித்த நபர் கடந்த மூன்று மாதங்களாக தேடப்பட்டு வந்தவர் எனவும், அவரே சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் எனவும் தடயவியல் அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் மேலும் ஆழமாக தடயங்களை சேகரித்து வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan