ஐந்தாவது தளத்தில் இருந்து குதித்த நபரால் பரபரப்பு!!
20 மாசி 2026 வெள்ளி 17:12 | பார்வைகள் : 2969
பரிசில் நபர் ஒருவர் ஐந்தாவது தளத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பெப்ரவரி 19, நேற்று வியாழக்கிழமை மாலை இச்சம்பவம் பரிஸ் 12 ஆம் வட்டாரத்தின் rue Traversière வீதியில் இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர் அங்குள்ள கட்டிடம் ஒன்றில் ஏறியுள்ளார். ஐந்தாவது தளம் வரை ஏறிய அவர், பின்னர் அங்கிருந்து கீழே குதித்துள்ளார்.
படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நபர் அப்பகுதிக்கு அந்நியமானவர் எனவும், அவரை அங்கிருப்பவர்கள் எவரும் அடையாளம் காணவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த உயிரிழந்த நபரை அடையாளம் காணும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire