இராணுவ வீரரின் தலையில் பாய்ந்த சன்னம்! - துப்பாக்கிச்சூட்டில் முடிந்த விருந்து!!
20 மாசி 2026 வெள்ளி 14:07 | பார்வைகள் : 2031
மது விருந்து ஒன்று துப்பாக்கிச்சூட்டில் முடிந்துள்ளது. இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
பெப்ரவரி 14, காதலர் தினம் அன்று இரவு இடம்பெற்ற விருந்துபசாரம் ஒன்றிலேயே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றது. Alexandre Lanckbeen என பெயர் குறிப்பிடப்படும் '35 ஆவது படைப்பிரிவு பரசூட் இராணுவ வீரர்' துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானார்.
9 மி.மீ கலிபர் வகை துப்பாக்கிச் சன்னம் அவர் தலையில் பாய்ந்த நிலையில், படுகாயமடைந்து Clamart (Hauts-de-Seine) நகரில் உள்ள Percy இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் மூன்று இராணுவத்தினர் கைது செய்யப்பட்டனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan