Paristamil Navigation Paristamil advert login

ஒற்றுமைக்கான இரவு 2026! - வீதிகளில் உறங்குபவர்கள் தொடர்பில் கணக்காய்வு!!

ஒற்றுமைக்கான இரவு 2026! - வீதிகளில் உறங்குபவர்கள் தொடர்பில் கணக்காய்வு!!

20 மாசி 2026 வெள்ளி 07:00 | பார்வைகள் : 508


"Nuit de la solidarité 2026" எனப்படும் வீடற்றவர்களை (SDF) கணக்கிடும் 'ஒற்றுமைக்கான இரவு 2026' நிகழ்ச்சித்திட்டம் அண்மையில் மேற்கொள்ளப்பட்டது.

அதன் முடிவில், பரிசில் வீடுகளற்று வீதிகளில், மேம்பாலங்களுக்கு கீழே, சுரங்கப்பாதைகளில், பூங்காக்களில் படுத்துறங்குபவர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டை விட அதிகமாகும். இந்தவருடத்துக்கான கணக்காய்வு ஜனவரி 28-29 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.  3,857 பேர் அவ்வாறு வீடுகளற்று வசிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் 11% சதவீதமானவர்கள் பெண்களாவார்.

சென்ற ஆண்டை விட 350 பேரால் இது அதிகமாகும்.. சென்ற ஆண்டு 3,507 பேர் எண்ணப்பட்டிருந்தனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்