இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!
19 மாசி 2026 வியாழன் 21:05 | பார்வைகள் : 2667
பரிசில் இளம் பெண் ஒருவர் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார். கனரக வாகனம் ஒன்றுடன் மோதிய அவர், படுகாயமடைந்து பலியானார்.
பரிசின் வடக்குப் பகுதியான 10 ஆம் வட்டாரத்தின் இன்று வியாழக்கிழமை காலை 9 மணி அளவில் குறித்த பெண் Barbès-Rochechouart நிலையம் அருகே துவிச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த நிலையில், கனரக வாகனம் ஒன்றுக்குள் எதிர்பாராமல் சிக்கியுள்ளார்.
படுகாயமடைந்த அப்பெண், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியில் பலியானார்.
20 வயதுடைய அப்பெண் விபத்தில் பலியானமை பெறும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan