Paristamil Navigation Paristamil advert login

Tempête Pedro : அனைத்து முன் ஏற்பாடுகளும் தயார்!

Tempête Pedro : அனைத்து முன் ஏற்பாடுகளும் தயார்!

19 மாசி 2026 வியாழன் 17:51 | பார்வைகள் : 508


பெட்ரோ புயல் காரணமாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை 'சிவப்பு' எச்சரிக்கை ஐந்து மாவட்டங்களுக்காக அதிகரித்துள்ளது.

தொடர் மழை காரணமாக பல மாவட்டங்கள் வெள்ளத்துக்குள் சிக்கியுள்ளன. முன் ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக இருப்பதாக உள்துறை அமைச்சர் Sébastien Lecornu அறிவித்துள்ளார். மீட்புக்குழுவினர் மற்றும் தீயணைப்பு படையினர் தயாராக இருப்பதாகவும், மீட்புப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பலர் இடமாற்றம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளம் காரணமாக Gironde, Lot-et-Garonne, Maine-et-Loire மற்றும் Charente-Maritime ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு அதிகபட்ச எச்சரிக்கையான 'சிவப்பு' எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த பட்டியலில் Loire-Atlantique மாவட்டமும் இணைந்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்