யாழ்ப்பாணத்தில் காணித் தகராறு - அடித்துக் கொலை செய்யப்பட்ட நபர்
16 மாசி 2026 திங்கள் 17:46 | பார்வைகள் : 1957
யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் நிலவிய நீண்டகால காணித் தகராறு காரணமாக ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்யக் கோப்பாய் பொலிஸார் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
கோப்பாய் கல்வியியற் கல்லூரிக்கு அருகில் இன்று (16) இடம்பெற்ற இந்தத் தாக்குதலில், அப்பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை செல்வரஞ்சன் (59 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபருக்கும் மற்றுமொரு தரப்பினருக்கும் இடையில் நீண்டகாலமாகக் காணிப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இன்று திங்கட்கிழமை இது தொடர்பாக ஏற்பட்ட தர்க்கம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. இதன்போது மூவர் இணைந்து நடத்திய தாக்குதலில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்துக் கோப்பாய் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். தாக்குதலை நடத்திய மூவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களைத் தேடி விசேட சுற்றிவளைப்புகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு, உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan