டி20 உலகக்கிண்ணப் போட்டி - C குழுவில் முதல் அணியாக வெளியேறிய நேபாளம்....
15 மாசி 2026 ஞாயிறு 10:57 | பார்வைகள் : 1498
நேபாள அணிக்கு எதிரான டி20 உலகக்கிண்ணப் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட்டுகள் இமாலய வெற்றி பெற்றது.
மேற்கிந்திய தீவுகள் மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக்கிண்ணப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது.
முதலில் ஆடிய நேபாளம் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 133 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
திபேந்திர சிங் ஐரி (Dipendra Singh Airee) 58 (47) ஓட்டங்களும், சோம்பல் காமி 26 (15) ஓட்டங்களும் எடுத்தனர். ஜேஸன் ஹோல்டர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணியில் பிரண்டன் கிங் 22 (17) ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அணித்தலைவர் ஷாய் ஹோப் மற்றும் ஷிம்ரான் ஹெட்மையர் வெற்றிக் கூட்டணி அமைத்தனர்.
ஷாய் ஹோப் (Shai Hope) 44 பந்துகளில் 61 ஓட்டங்களும் (3 சிக்ஸர், 5 பவுண்டரிகள்), ஷிம்ரான் ஹெட்மையர் 32 பந்துகளில் 46 ஓட்டங்களும் (2 சிக்ஸர், 4 பவுண்டரிகள்) விளாசினர்.
இதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் 15.2 ஓவர்களிலேயே 1 விக்கெட் இழப்பிற்கு 134 ஓட்டங்கள் எடுத்து, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
தோல்வியுற்ற நேபாள அணி C குழுவில் முதல் அணியாக வெளியேறியது. 17ஆம் திகதி ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான தனது கடைசி போட்டியில் நேபாளம் விளையாட உள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan