ஆசியநாடொன்றை நேரடியாக சீண்டிய மக்ரோன்!!
14 மாசி 2026 சனி 12:00 | பார்வைகள் : 2555
ரஷ்யாவுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
முனிச் நகரில் இடம்பெற்ற பாதுகாப்பு மாநாட்டில் வைத்து பெப்ரவரி 13, நேற்று வெள்ளிக்கிழமை இதனைத் தெரிவித்தார். “நாங்கள் அழுத்தம் கொடுப்பதை தொடருவோம். மிக தீவிரமாக அதனைச் செய்வோம். அமைதிப்பேச்சுவார்த்தைகளின் போதே பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர். அடுத்த மொஸ்கோ-கீவ்-வாஷிங்டன் அமர்வில் கட்டாயமான ஒரு ராஜதந்திர அமைதி உடன்படிக்கையை எட்டவேண்டும்!” என மக்ரோன் வலியுறுத்தினார்.
கிட்டத்தட்ட 60 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டிருந்த இந்த கூட்டத்தின் போது சீனாவை நேரடியாக தாக்கி பேசினார். “ரஷ்யா தனது பாதுகாப்புக்காக பில்லியன் கணக்கில் செலவிடுகிறது; அது சீனாவை முழுமையாகச் சார்ந்திருக்கும் ஒரு தனிப்பட்ட பொருளாதார சக்தியாகும். ரஷ்யாவின் என கடிந்து தள்ளினார்.
“ஐரோப்பாவின் பாதுகாப்பும் வலுப்படுத்தப்பட வேண்டும். எங்களுக்கு மிக வலுவான ஐரோப்பா வேண்டும் ஐரோப்பியர்கள் என்பதில் நாம் பெருமைப்படுகிறோம்!” எனவும் அவர் தெரிவித்தார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan