புதிய பொருளாதார கோட்பாடு அவசியம்: கவர்னர் ரவி
1 தை 2026 வியாழன் 06:07 | பார்வைகள் : 614
நாட்டின் உண்மையான வளர்ச்சியை அறிய, புதிய பொருளாதார கோட்பாடுகள் அவசியம், என கவர்னர் ரவி தெரிவித்தார்.
இந்திய பொருளாதார சங்கத்தின் 108ம் ஆண்டு மாநாடு, சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவன வளாகத்தில் கடந்த மாதம் 27ல் துவங்கி நேற்று முன்தினம் முடிந்தது.
மாநாட்டை, பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவர் பேராசிரியர் மகேந்திர தேவ் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், இச்சங்கத்தின் நான்காவது 'கவுடில்யா' விருது, வேல்ஸ் கல்வி குழுமம் மற்றும் நிறுவனங்களின் தலைவர் டாக்டர் ஐசரி கே கணேஷுக்கு வழங்கப்பட்டது.
கல்வி, தலைமுறை வளர்ச்சி மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்காக சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக, இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
தொடர்ந்து, கவர்னர் ரவி பேசியதாவது:
கடந்த 19ம் நுாற்றாண்டு துவக்கத்தில், உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருந்தோம். காலனித்துவ ஆட்சி காலத்தில் நம் பொருளாதாரம் சிதைக்கப்பட்டது.
தற்போது, உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக உள்ளோம். விரைவில், மூன்றாம் இடத்தை அடைவோம். கடந்த 10 ஆண்டுகளில், 25 கோடி மக்கள் தீவிர வறுமையில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர். இதுபோன்ற சாதனைகள் உலகில் வேறு எங்கும் நடந்திருக்காது.
இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்து கவலை வேண்டாம். அது சரியான பாதையில் பயணிக்கிறது. நாம் மேற்கத்திய நாடுகள் வகுத்த அளவுகோல்களை வைத்து, இந்திய பொருளாதாரத்தை மதிப்பிடுகிறோம். ஜி.டி.பி., வேலைவாய்ப்பு ஆகியவை மட்டுமே அளவு கோல்களாக உள்ளன.
மத்திய அரசின் 'முத்ரா' கடன் திட்டத்தால், நாட்டில் 52 கோடி பேர் பயன் அடைந்துள்ளனர். இதுவரை, 33 லட்சம் கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும், 3.25 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
வளர்ச்சி என்பது வருமானம் மட்டும் கிடையாது. குடிநீர், மின்சாரம், வீடு, கழிப்பறை, சுகாதாரம், காப்பீடு போன்ற அடிப்படை வசதிகள் அனைவருக்கும் கிடைத்திருக்கின்றன. இவை அனைத்தும் பொருளாதார வளர்ச்சியின் பகுதிகள்தான்.
நாட்டின் புதிய பொருளா தார வளர்ச்சியை புரிந்துகொள்ள, புதிய பொருளா தார கோட்பாடுகள் அவசியம். உண்மையான தரவுகளை சேகரித்து, புதிய பொருளாதார மொழியை உருவாக்குவது, இன்றைய பொருளாதார அறிஞர் களின் கடமை. இவ்வாறு அவர் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan