ஈரானில் இராணுவ நடவடிக்கை பிரான்சின் முதன்மைத் தேர்வு அல்ல!!
26 தை 2026 திங்கள் 08:05 | பார்வைகள் : 5052
ஈரானில் இராணுவ தலையீடு மேற்கொள்ளுவது பிரான்சின் முதன்மையான விருப்பம் அல்ல என்று பிரான்ஸ் தெரிவித்துள்ளது. “இந்த ஆட்சியை அகற்றுவது ஈரான் மக்களின் பொறுப்பு; அவர்களின் தலைவர்களை தேர்ந்தெடுப்பது எங்களின் வேலை அல்ல” என்று பிரான்ஸ் ஆயுதப்படைகளுக்கான துணை அமைச்சர் அலிஸ் ரூஃபோ (Alice Rufo) கூறியுள்ளார்.
கடந்த டிசம்பர் இறுதியில் தொடங்கிய போராட்டங்களை இரத்த வெள்ளத்துடன் அடக்கிய ஈரான் அரசின் நடவடிக்கைகளுக்கு பதிலாக பிரான்ஸ் இராணுவ நடவடிக்கையை நிராகரிக்கிறது. ஈரான் மக்களை அரசியல், தூதரக மற்றும் தகவல் வழிகளின் மூலம் ஆதரிக்க வேண்டும் என்றும், இணையத் தடையால் மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்துவது கடினமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரான்மீது தாக்குதல் நடத்த எச்சரித்திருந்தார். ஈரான் அரசுத் தகவலின்படி 3,117 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மனித உரிமை அமைப்புகளின் கணக்கில் 5,000-க்கும் மேற்பட்டோர், பெரும்பாலும் போராட்டக்காரர்கள், கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan