Gare du Nord அருகே தீ விபத்து: 80 வயதுடையவர் பலி!!
25 தை 2026 ஞாயிறு 16:20 | பார்வைகள் : 3774
பரிஸின் 9-வது வட்டாரத்தில், Gare du Nord ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள Pierre-Sémard தெருவில் அமைந்த குடியிருப்பு கட்டிடத்தின் கடைசி மாடியில், நேற்று இரவு கடும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுமார் 80 வயதுடைய ஒருவர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
தீ ஏற்பட்டதாகக் கருதப்படும் அதே குடியிருப்பிலேயே அவர் வசித்து வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இரவு 9.40 மணியளவில் தகவல் கிடைத்ததும், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆறாம் மற்றும் கடைசி மாடியில் பரவிய தீயை அணைக்க 67 தீயணைப்பு வீரர்கள், 17 வாகனங்களுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 300 சதுர மீட்டர் பரப்பளவிலும், கூரையின் ஒரு பகுதியிலும் பரவிய தீயை முழுமையாக அணைக்க ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக எடுத்துக் கொண்டது. கட்டிடத்தில் வசித்த மற்ற சுமார் 15 பேர் புகை பரவியதும் தாமாகவே வெளியேறினர். தீ விபத்தின் காரணம் இதுவரை தெரியவில்லை.
சம்பவ இடத்தில் பாதுகாப்பு மற்றும் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன; சில குடியிருப்பாளர்கள் தற்காலிக மறுவசதிக்காக நகராட்சியை அணுகியுள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan