Paristamil Navigation Paristamil advert login

குற்றச் செயல்களில் வெளிநாட்டவர்கள்!!

குற்றச் செயல்களில் வெளிநாட்டவர்கள்!!

25 தை 2026 ஞாயிறு 13:25 | பார்வைகள் : 4233


Gironde பிராந்திய அரசப் பிரதிநிதி (Préfet)  எத்தியன் குய்யோ (Étienne Guyot) ஊடகங்களுக்கு வழங்கிய புத்தாண்டு வாழ்த்துகளின் போது 2025ஆம் ஆண்டுக்கான அறிக்கையை வெளியிட்டார்.

இதில், குடியேற்றத்துடன் தொடர்புடைய பாதுகாப்பு பிரச்சினைகள் மற்றும் சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிரான பலப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் வலியுறுத்தினார்.

Gironde பகுதியில், 1,000க்கும் மேற்பட்டோர் பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாய உத்தரவான  OQTF (Obligation de Quitter le Territoire Français= பெற்றுள்ளனர்.

«OQTF பெற்றவர்கள் சில நேரங்களில் குற்றச்செயல்களில் ஈடுபடுவதால், அவர்கள் வெளியேறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்» எனவும்
அதற்கான ஆதாரமாக அவர் ஒரு முக்கிய எண்ணையும் குறிப்பிட்டார்.

«பொது இடங்களில் நடைபெறும் குற்றச்செயல்களின் 49% வெளிநாட்டவர்களால் மேற்கொள்ளப்படுகின்றன»

என்று தெரிவித்த Étienne Guyot, மேலும், 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 30% அதிகமான வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

இவரது தகவலும் இந்த உரையும், Mérignac நிர்வாகக் காவலில் வைக்கும் மையத்தின் புதுப்பிப்பு பணித் தளத்தில் நடந்த, சேதப்படுத்தும் தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்கும் குறைவான காலத்திற்குப் பிறகு வந்துள்ளது.

குண்டு தாங்கும் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன, தரை கற்கள் நொறுக்கப்பட்டன, மின்கம்பிகள் வெட்டப்பட்டன. இழப்பு பல இலட்சம் யூரோக்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. விசாரணை தொடங்கப்பட்டு, அது  ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத மற்றும் முறையற்ற குடியேற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகள்

அதிகாரிகள் கட்டுப்பாடுகளை மேலும் பலப்படுத்தியுள்ளனர். 2025 மே மாதத்தில், சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிரான தேசிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அதிகமாகப் பயன்படுத்தப்படும் பயணப் பகுதிகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

«2024-இல் Gironde-இல் 2,700-க்கும் மேற்பட்ட முறையற்றமுறையற்ற தங்குநிலை வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். 2025-இல், சுமார் 4 மாதங்கள் முடிவடையும் வரை, சுமார் 950 முறையற்ற தங்குநிலை வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆகவே, ஆண்டு ஒன்றுக்கு மற்றொன்றுடன் ஒப்பிடும்போது நிலைமைகள் சுமார் ஒரே மாதிரியே உள்ளது»

என்றும் தெரிவித்தார்.
 

12 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026