நாட்டை விட்டு வெளியேற பணிக்கப்பட்ட ஒருவர் - காவல்துறையினரால் கைது!!
25 தை 2026 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 1923
பிரான்சை விட்டு கட்டாயமாக வெளியேற வேண்டும் ( obligation de quitter le territoire français ) என பணிக்கப்பட்ட ஒருவர், குற்றச்செயலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
நீஸ் நகரில் வெள்ளிக்கிழமை அதிகாலை 90 வயதுடைய பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு 29 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் துனிசியா நாட்டைச் சேர்ந்தவர் எனவும், அவர் இதே போன்ற ஒரு குற்றச்சாட்டில் சில மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு, பின்னர் அவருக்கு OQTF எனப்படும் நாட்டை விட்டு கட்டாயமாக வெளியேறவேண்டும் எனும் அறிவுறுத்தலும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், அவர் மேற்படி பாலியல் வல்லுறவு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும் எனவும், இந்த ஒழுக்கற்ற செயலை எதிர்கொள்ள நீதி மிகுந்த உறுதியுடன் செயற்படவேண்டும் என நீஸ் நகர முதல்வர் சாடினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan