Paristamil Navigation Paristamil advert login

ஐ.நா எனக்கு உதவி செய்யவே இல்லை - குற்றஞ்சாட்டும் ட்ரம்ப்

 ஐ.நா எனக்கு உதவி செய்யவே இல்லை - குற்றஞ்சாட்டும் ட்ரம்ப்

22 தை 2026 வியாழன் 04:58 | பார்வைகள் : 840


ஒரு போரை நிறுத்துவதற்கு கூட ஐ.நா எனக்கு உதவி அளிக்கவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.

அமெரிக்க அதிபராக பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் நேற்று முன்தினம் பேட்டியளித்தார்.

அப்போது காசா அமைதி வாரியம் அமைத்ததன் மூலம் ஐநா.வை மாற்ற விரும்புகிறீர்களா என நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த ட்ரம்ப் கூறியதாவது: ஐநா. மிகவும் உதவியாக இல்லை. நான் ஐநா.வின் திறனைப் பெரிதும் விரும்புகிறேன், ஆனால் அது ஒருபோதும் அதன் திறனைப் பூர்த்தி செய்யவில்லை.

நான் தீர்த்து வைத்த ஒவ்வொரு போர்களையும் ஐ.நா. தீர்த்து வைத்திருக்க வேண்டும். நான் ஒருபோதும் அவற்றிற்குச் செல்ல நினைத்ததில்லை. அந்தப் போர்களை அவர்களால் தீர்த்து வைக்க முடியும்.

அவர்களால் முடியாது. ஐநாவைத் தொடர அனுமதிக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன், ஏனென்றால் அதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகம். இவ்வாறு டிரம்ப் கூறினார்.

8 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026