ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பனிச்சரிவு - ஆஸ்திரியாவில் ஐவர் பலி
18 தை 2026 ஞாயிறு 08:47 | பார்வைகள் : 275
ஆஸ்திரிய ஆல்ப்ஸ் மலைத்தொடரில் ஏற்பட்ட பனிச்சரிவில் 5 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க் நகருக்கு அருகிலுள்ள போங்காங்(Pongau) பகுதியில் உள்ள மலைத்தொடரில் அடுத்தடுத்து இரண்டு பனிச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
இந்த பனிச்சரிவானது அப்பகுதியில் பெய்த கனமழை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக ஏற்பட்டிருப்பதாக உள்ளூர் மீட்புப் படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த எதிர்பாராத பனிச்சரிவு சம்பவத்தில் சிக்கி, 5 எல்லை தாண்டிய பனிச்சறுக்கு விளையாட்டு வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதற்கு சுமார் 90 நிமிடங்கள் முன்னதாக அதே பகுதியில் தனியாக பனிச்சறுக்கு செய்து கொண்டிருந்த பெண் ஒருவரும் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் சிக்கிக் கொண்ட 7 பேர் கொண்ட பனிச்சறுக்கு குழுவில் 4 பேரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர், ஒருவரை மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டு மீட்பு படையினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் நிலவி வரும் அபாயகரமான வானிலையில் சிக்கி பல வீரர்கள் உயிரிழந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan