Paristamil Navigation Paristamil advert login

சருமத்தில் உள்ள மருக்களை உதிர வைக்கும் இயற்கை வழிகள்

சருமத்தில் உள்ள மருக்களை உதிர வைக்கும் இயற்கை வழிகள்

5 வைகாசி 2018 சனி 08:36 | பார்வைகள் : 15146


 உடலில் அக்குள், கழுத்து, மார்பு போன்ற பகுதிகளில் வரும் மருக்கள், வலியை ஏற்படுத்தாமல் இருக்கலாம். இருப்பினும் அவை அழகைக் கெடுக்கும் வகையில் இருப்பதால், அதை எப்படியாவது நீக்க வேண்டும் என நினைப்போம். இன்று சருமத்தின் அழகைக் கெடுக்கும் வகையில் வரும் மருக்களை உதிரச் செய்யும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினாலே மருக்களை எளிதில் உதிர வைக்கலாம்.

 
* சருமத்தில் உள்ள மருக்களை உதிரச் செய்வதற்கு ஆப்பிள் சீடர் வினிகர் பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு மரு உள்ள பகுதியை சுத்தம் செய்து, பின் ஒரு பஞ்சுண்டையை ஆப்பிள் சீடர் வினிகரில் நனைத்து பிழிந்து, மருக்களின் மீது வைத்து நன்கு காய வைக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 3 முறை செய்து வந்தால், மருக்கள் உலர ஆரம்பிக்கும். இப்படியே தொடர்ந்து 10 நாட்கள் செய்து வந்தால், மருக்கள் நன்கு உலர்ந்து உதிர்ந்துவிடும்.
 
 
 
* 1 1/2 டீஸ்பூன் விளக்கெண்ணெயில் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலந்து, மருக்களின் மீது தடவி 30 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை என 15 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், மருக்கள் உதிர்ந்துவிடும்.
 
* 5 டீஸ்பூன் நீரில், 3 துளிகள் டீ-ட்ரீ ஆயில் சேர்த்து கலந்து, பஞ்சுருண்டையின் உதவியுடன் அக்கலவையை மருக்களின் மீது தடவ வேண்டும். பின் அப்பகுதியை உலர வைக்க வேண்டும். இந்தமுறையை ஒரு நாளைக்கு தினமும் 3 முறை என ஒரு மாதம் தொடர்ந்து செய்ய நல்ல பலன் கிடைக்கும்.
 
* ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி, அதன் ஒரு பாதியைப் பிழிந்து சாறு எடுத்து, பஞ்சுருண்டையில் நனைத்து மருக்களின் மீது தடவுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், மருக்கள் விரைவில் காய்ந்து உதிரும். ஒருவேளை இச்செயலால் மருக்களின் தோற்றத்தில் மாற்றத்தைக் கண்டால், தோல் மருத்துவரிடம் சென்று ஆலோசனைப் பெறுங்கள்.
 

3 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026