Paristamil Navigation Paristamil advert login

ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு - திமுகவை சீண்டிய மாணிக்கம் தாகூர்

ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு - திமுகவை சீண்டிய மாணிக்கம் தாகூர்

16 தை 2026 வெள்ளி 10:58 | பார்வைகள் : 1531


ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்று பொங்கல் திருநாளில் காங்கிரஸ் ஏம்.பி. மாணிக்கம் தாகூர் திமுகவை சீண்டி ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், "தை பிறந்தால் வழி பிறக்கும்.. ஆட்சியில் பங்கு என்பது என்ன என்பதை நாம் அறிய ஒரு மாடல்.

கேரளாவின் UDF மாடல். கூட்டணி அரசியல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான நம்பிக்கையான பாதையை காட்டுகிறது.

காங்கிரஸ் தலைமையேற்கிறது — ஆனால் அதிகாரம் குவிக்கப்படவில்லை; பகிரப்படுகிறது.

நட்பு + பங்கு. இதுவே UDF அரசியலின் அடித்தளம்.

UDF-ல் நாங்கள் தேர்தலை ஒன்றாகவே எதிர்கொள்கிறோம். பரஸ்பர நம்பிக்கையும், ஒரே அரசியல் நோக்கமும் அவர்களின் பலம்.