Argenteuil: வாகனத்தின் பின்பக்கத்தில் கட்டிப்போடப்பட்ட நபர் மீட்பு: இரு கடத்தல்காரர்கள் கைது!!
13 தை 2026 செவ்வாய் 15:35 | பார்வைகள் : 5338
ஆர்ஜந்தெய்யில் (Argenteuil) நடைபெற்ற கடத்தல் சம்பவத்தில், வேறு ஒரு விசாரணையின் காரணமாக கண்காணிப்பில் இருந்த காவல் துறையினர் தற்செயலாக இந்த குற்றத்தை நேரில் கண்டுள்ளனர்.
ஒரு வாகனத்தின் பின்பகுதியில் கட்டிப்போடப்பட்டிருந்த நபரை அவர்கள் மீட்டு, குற்றம் நடந்த உடனே இரு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர். இந்த கடத்தல் ஒழுங்குபடுத்தப்பட்ட குழுவால் மேற்கொள்ளப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட இரு ஆண்களும் எசோன் மற்றும் வல்-து-மரின் பகுதிகளில் வசிப்பவர்கள்; போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றங்களில் ஏற்கனவே தண்டனை பெற்றவர்கள். அவர்கள் விசாரணையில் ஒத்துழைக்க மறுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட நபரும் இதே வகை குற்றங்களில் தொடர்புடையவராக அறியப்பட்டவர்; அவரும் காவல் துறையினருக்கு மிகக் குறைந்த தகவல்களையே தெரிவித்துள்ளார். ஜனவரி 12, திங்கட்கிழமை, பொன்துவாஸ் நீதிமன்றத்தில் இரண்டு ஆண்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, தற்காலிக காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan