Paristamil Navigation Paristamil advert login

கண்களைப் பாதுகாக்க தினமும் செய்ய வேண்டிய பழக்கங்கள்!

கண்களைப் பாதுகாக்க தினமும் செய்ய வேண்டிய  பழக்கங்கள்!

9 மார்கழி 2025 செவ்வாய் 16:34 | பார்வைகள் : 1803


நம் உடலில் மிகவும் முக்கியமான, உணர்திறன் கொண்ட உறுப்புகளில் கண்களும் ஒன்று. தற்போதைய நவீன வாழ்வில், கணினி, மொபைல் திரை வெளிச்சங்களுக்கு மத்தியில் கண் ஆரோக்கியத்தை பாதுகாப்பது மிகவும் அவசியமாகிறது. உங்கள் கண்களை பாதுகாக்க நீங்கள் தினசரி பின்பற்ற வேண்டிய சில அத்தியாவசிய பழக்கங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

கணினி அல்லது மொபைலில் பணிபுரியும்போது, ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒருமுறை, 20 அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளை, 20 விநாடிகளுக்கு பார்க்க வேண்டும். இது கண் சோர்வை குறைக்கும்.

கண்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கவும், சோர்வை போக்கவும் தினமும் 7 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்த உறக்கம் அவசியம்.

வைட்டமின் ஏ, சி, இ, துத்தநாகம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த கேரட், கீரைகள், மீன் போன்ற உணவுகளை தினசரி சேர்த்துக்கொள்ளுங்கள்.

திரைகளை பார்க்கும்போது சிமிட்டும் அளவு குறையும். இதனால் கண் வறட்சி ஏற்படும். வறட்சியை தவிர்க்க, கவனமாக அடிக்கடி கண்களை சிமிட்டுங்கள்.

கண்களை தேய்ப்பதை தவிர்க்கவும்: தூசியோ அல்லது அரிப்போ ஏற்பட்டால், உடனடியாக கண்களை தேய்ப்பதை தவிர்த்து, சுத்தமான தண்ணீரால் கழுவுங்கள்.

10 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026