#MeTooEcole மக்ரோனிடம் பெற்றோர்கள் அவசர கோரிக்கை!!!
7 மார்கழி 2025 ஞாயிறு 16:03 | பார்வைகள் : 5790
பரிஸைச் சேர்த்து பல மழலையர் பள்ளிகளில் குழந்தைகள் மீது நடைபெற்ற பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகள் வெளிப்பட்டதைத் தொடர்ந்து, பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் குடிமக்களால் உருவாக்கப்பட்ட #MeTooEcole என்ற குழு, இம்மானுவல் மக்ரோனுக்கும் பிரிஜிட் மக்ரோனுக்கும் திறந்த கடிதம் எழுதி, குழந்தைகளை பாதுகாக்க வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறது.
“குழந்தைகளின் மாற்றமான நடத்தை, பயம், அழுகை போன்றவற்றின் பின்னால் உடல், மனம் அல்லது பாலியல் வன்முறை இருக்கலாம்” எனக் குழு எச்சரிக்கிறது. 2025 ஆம் ஆண்டில் பரிஸில் 30 ஆனிமேட்டர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர், அவர்களில் 16 பேருக்கு பாலியல் தன்மை கொண்ட செயல்களுக்கு சந்தேகமுண்டு, மேலும் 15 விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலைமை, குழந்தைகள் பாதுகாப்பில் நிறுவனங்களின் தோல்வியையும், “அது பெரிய விஷயம் இல்லை” என்ற மனப்போக்கையும் வெளிப்படுத்துகிறது என #MeTooEcole குற்றம் சாட்டுகிறது. குழந்தைகளுடன் பணிபுரிபவர்களின் பின்னணி கட்டாயமாகச் சரிபார்க்கப்பட வேண்டும், ஒவ்வொரு பள்ளிக்கும் தெளிவான அறிவிப்பு மற்றும் உடனடி பாதுகாப்பு நடைமுறை இருக்க வேண்டும், மேலும் பாடசாலை périscolaires அமைப்புகள் தொடர்பாக தேசிய அளவிலான விசாரணை மற்றும் ஆய்வு தொடங்கப்பட வேண்டும் என்று கோருகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan