Paristamil Navigation Paristamil advert login

கழிவில் இருந்து ஹைட்ரஜன் - IIT ரூர்கியின் புதிய தொழில்நுட்பம் தொழில்துறைக்கு மாற்றம்

கழிவில் இருந்து ஹைட்ரஜன் - IIT ரூர்கியின் புதிய தொழில்நுட்பம் தொழில்துறைக்கு மாற்றம்

7 மார்கழி 2025 ஞாயிறு 12:01 | பார்வைகள் : 148


ரூர்க்கியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT Roorkie), கழிவுகளை ஹைட்ரஜனாக மாற்றும் புதிய தொழில்நுட்பத்தை தொழில்துறைக்கு மாற்றியுள்ளது.

 

இந்த முன்னேற்றம், இந்தியாவின் தூய்மையான ஆற்றல் உற்பத்தி முயற்சியில் முக்கியமான படியாகக் கருதப்படுகிறது.

 

இந்த தொழில்நுட்பத்தை, IIT ரூர்கியின் பேராசிரியர் நரபுரெட்டி சிவ மோகன் ரெட்டி உருவாக்கியுள்ளார்.

 

இது, Continuous Catalytic Hydrothermal Gasification (CCHG) முறையை பயன்படுத்தி, ஆர்கானிக் திரவக் கழிவுகளை ஹைட்ரஜன் நிறைந்த வாயுவாக மாற்றுகிறது.

 

ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட இந்த முறையை, தற்போது Infinate Integrated Energy Technologies LLP நிறுவனம் தொழில்துறையில் பயன்படுத்த உள்ளது.

 

இந்த அமைப்பு, scalability-க்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டதால், பெரிய அளவில் கழிவுகளைச் சுத்தமான ஆற்றலாக மாற்றும் திறன் கொண்டது.

 

ஆராய்ச்சியாளர்கள், இந்த தொழில்நுட்பம் கரிம கழிவுகளை உற்பத்தி செய்யும் தொழில்களில் பெரும் பயன்பாடு பெறும் எனக் கூறுகின்றனர்.

 

இது, கழிவு மேலாண்மை மற்றும் ஹைட்ரஜன் மீட்பு ஆகியவற்றுக்கு நிலையான தீர்வாக அமையும்.

 

கார்பன் உமிழ்வை குறைத்து, சுழற்சி பொருளாதாரம் (Circular Economy) நோக்கில் இந்தியாவின் முன்னேற்றத்தை ஆதரிக்கும்.

 

தொழில்துறைகள், கழிவுகளை சுற்றுச்சூழல் சுமையாக அல்லாமல், ஆற்றல் மூலமாக மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு பெறுகின்றன.

 

IIT ரூர்கி உருவாக்கிய இந்த ஹைட்ரஜன் தொழில்நுட்பம், இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முயற்சியில் முக்கிய பங்களிப்பை வழங்குகிறது. கழிவுகளை ஆற்றலாக மாற்றும் இந்த முன்னேற்றம், தொழில்துறைகளுக்கு சுத்தமான, நிலையான தீர்வை வழங்கும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்