Paristamil Navigation Paristamil advert login

பரிஸில் தடுக்கப்பட்ட தங்கக் கொள்ளை: நால்வர் கைது!!

பரிஸில் தடுக்கப்பட்ட தங்கக் கொள்ளை: நால்வர் கைது!!

4 மார்கழி 2025 வியாழன் 21:56 | பார்வைகள் : 2348


பரிஸ் மற்றும் கிறேத்தல் (Créteil) பகுதிகளில் பல மாதங்கள் கண்காணிப்புக்குப் பிறகு, மதிப்புமிக்க தங்க வியாபாரி அல்லது தங்கம் உருக்கும் ஆலையை குறிவைத்து கொள்ளை செய்யத் திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

முதலில் இருவர் 2024 டிசம்பரில் காவல்துறையின் கவனத்திற்கு உள்ளான பின்னர் அவர்கள் மாதத்திற்கு ஒருமுறை பரிஸ் பிராந்தியத்திற்கு வரும் தங்க வியாபாரியைக் குறிவைத்து எளிதான தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தனர். அந்தத் தாக்குதலைக் குறிக்கோளாக வைத்து நடந்த கண்காணிப்பின் போது, ஒருவர் கிறேத்தலிலும் மற்றவர் வீட்டிலும் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 

விசாரணையின் தொடர்ச்சியில், மேலும் இரு சந்தேக நபர்கள் les rues des Haudriettes (பரிஸ் 3) பகுதியில்  அடையாளம் காணப்பட்டு எசோன்னில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

போதைப்பொருள் மற்றும் பிற குற்றச்செயல்களுக்காக முன்பு அறியப்பட்ட இவர்கள் இருவரும் தங்களின் தொடர்பை மறுக்கின்றனர்; ஒருவர் அந்தப் பகுதியில் நண்பர்களைச் சந்திக்க வந்ததாகவும் மற்றொருவர் சிறையில் இருந்ததால் நினைவிழந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இவர்களை காவலில் வைக்கும் முடிவு இன்னும் நீதிமன்றத்தால் அறிவிக்கப்படவில்லை.

10 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026