Paristamil Navigation Paristamil advert login

“பயனைக் காட்டிலும் ஆபத்து அதிகம் : புதிய மருந்துகளைத் தவிர்க்குமாறு பிரெஸ்கிர் அறிவுறுத்தல்!!

“பயனைக் காட்டிலும் ஆபத்து அதிகம் : புதிய மருந்துகளைத் தவிர்க்குமாறு பிரெஸ்கிர் அறிவுறுத்தல்!!

2 மார்கழி 2025 செவ்வாய் 22:01 | பார்வைகள் : 3356


பிரெஞ்சு மருத்துவ இதழான பிரெஸ்கிர் (Prescrire) தனது ஆண்டு மதிப்பீட்டில், பயனைக் காட்டிலும் ஆபத்து அதிகமாக உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மருந்துகளை “தவிர்க்க வேண்டியவை” என்று டிசம்பர் 1 ஆம் தேதி திங்கட்கிழமை  அறிவித்துள்ளது. 

வயிற்றுப்போக்குக்கு சிகிச்சையளிப்பதற்காக பல மருந்து பெட்டிகளில் காணப்படும் சின்னமான ஸ்மெக்டா (Smecta) போன்றவை பெரும்பாலும் பயனற்றவை என்றும் அதன் கலவையில் ஈயம் இருப்பதால் நச்சுத்தன்மை வாய்ந்தவை என்றும்  கருதப்படுகின்றன.

இந்த ஆண்டு, நான்கு சிகிச்சைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன, அவை மகளிர் மருத்துவம் முதல் நுரையீரல் மருத்துவம் வரை பரந்த அளவிலான நிலைமைகளை உள்ளடக்கியது. அவற்றில் fézolinétant (Veoza) மாதவிடாய் நின்ற பெண்களில் சூடான géfapixant (Lyfnua) chronic இருமலுக்காகவும் பரிந்துரைக்கப்பட்டாலும், கடுமையான கல்லீரல் பிரச்சினைகள், ருசி குறைபாடுகள் மற்றும் நிமோனியா போன்ற ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடும் என பிரெஸ்கிர் எச்சரிக்கிறது.

அதேபோல், chondroïtine (Chondrosulf) போன்ற மூட்டு வலி (அர்த்ரோசிஸ்) சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளின் பயன் நிரூபிக்கப்படாததோடு, கடுமையான ஒவ்வாமை பிரச்சினைகளும் ஏற்படலாம் என்று குறிப்பிடப்படுகிறது. சில நிபுணர்கள் பிரெஸ்கிர் இதழின் சுயாதீனத்தையும் அதன் எச்சரிக்கைகளையும் பாராட்டினாலும், மாற்று சிகிச்சைகள் குறைவாக உள்ள நிலையில் இந்த மருந்துகளை முற்றிலும் தவிர்க்கும் பரிந்துரை சில நேரங்களில் மிகையாக இருக்கலாம் என்ற கருத்தும் வெளிப்பட்டுள்ளது.

10 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026