உணவக கழிவறைக்குள் வைத்து - சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய நால்வர் கைது!
2 மார்கழி 2025 செவ்வாய் 17:00 | பார்வைகள் : 100
உணவகத்தின் கழிவறை ஒன்றுக்குள் வைத்து 13 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் பரிசில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய நால்வரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பரிஸ் 1 ஆம் வட்டாரத்தில் உள்ள Forum des Halles வணிக வளாகத்தில் உள்ள KFC துரித உணவகத்தில் வைத்து இச்சம்பவம் டிசம்பர் 1, நேற்று திங்கட்கிழமை இரவு 10.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பரிசின் *மத்திய காவல்துறையினரிடம் 13 வயதுடைய சிறுமி ஒருவர் தாம் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். அதை அடுத்து காவல்துறையினர் துரிதமாக செயற்பட்டு குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.
சிறுமியை பின் தொடர்ந்து கழிவறை வரை சென்ற நால்வரும், அங்கு வைத்து சிறுமியை வல்லுறவுக்கு உபடுத்தியுள்ளனர். அவர்கள் 2001, 2005, 2007 ஆம் ஆண்டுகளில் பிறந்தவர்கள் எனவும், அனைவரும் விசாரணைக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(* 1 தொடக்கம் 4 ஆம் வட்டாரம் வரையான பகுதிகளை இணைத்து மத்திய காவல்துறையினராக செயற்படுகின்றனர்)






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan