Paristamil Navigation Paristamil advert login

ரஷ்ய தாக்குதல் தொடர்பில் உக்ரைனுக்கு கோரிக்கை விடுக்கும் கஜகஸ்தான்

ரஷ்ய தாக்குதல் தொடர்பில் உக்ரைனுக்கு கோரிக்கை விடுக்கும் கஜகஸ்தான்

1 மார்கழி 2025 திங்கள் 14:28 | பார்வைகள் : 1677


காஸ்பியன் குழாய்வழி கூட்டமைப்பின் கருங்கடல் முனையத்தைத் தாக்குவதை நிறுத்துமாறு மத்திய ஆசிய நாடான கஜகஸ்தான் உக்ரைனிடம் கோரிக்கை வைத்துள்ளது.

 

குறித்த முனையத்தில் உலகளாவிய எண்ணெய் தேவையில் 1% க்கும் அதிகமாக கையாளப்படுகிறது.

 

ரஷ்யாவின் இரண்டு ரகசிய எண்ணெய் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.

 

மட்டுமின்றி, ஏற்றுமதிக்கான உள்கட்டமைப்பும் கடுமையாக சேதமடைந்துள்ளது. காஸ்பியன் குழாய்வழி கூட்டமைப்பில் ரஷ்யா, கஜகஸ்தான் மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் சில பங்குதாரர்களாக உள்ளனர்.

 

உக்ரேனிய கடற்படையின் ட்ரோன் தாக்குதலால் கருங்கடலில் உள்ள அதன் ரஷ்ய முனையத்தில் ஒரு முனையம் மோசமாக சேதமடைந்ததை அடுத்து, அதன் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளது.

 

இந்த ஆண்டு ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கச்சா எண்ணெய் முனையங்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை உக்ரைன் நடத்தி வருகிறது.

 

ரஷ்யாவின் போருக்கான மிக முக்கியமான வருமான ஆதாரங்களில் ஒன்றான எண்ணெய் ஏற்றுமதியை முடக்கும் முயற்சி இதுவென்றே கூறப்படுகிறது.

 

கஜகஸ்தானின் வெளிவிவகார அமைச்சகம் தெரிவிக்கையில்,

 

சர்வதேச சட்டத்தின் விதிமுறைகளால் பாதுகாக்கப்படும் பொதுமக்களால் பிரத்தியேகமாக செயல்படுத்தப்படும் ஒரு வசதியின் மீதான மூன்றாவது தொடர் தாக்குதல் இது என்று கூறியது.

 

மேலும், ரஷ்யாவின் நோவோரோசிஸ்க் துறைமுகத்தில் உள்ள சர்வதேச காஸ்பியன் குழாய் கூட்டமைப்பின் முக்கியமான உள்கட்டமைப்பு மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலுக்கு கஜகஸ்தான் தனது எதிர்ப்பைத் தெரிவிக்கிறது என்றும் கஜகஸ்தாம் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

 

அத்துடன், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க உக்ரைன் தரப்பு பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

 

ஆனால், உக்ரைன் தனது நடவடிக்கைகளை கஜகஸ்தான் அல்லது மூன்றாம் தரப்பினருக்கு எதிராக முன்னெடுக்கவில்லை என்றும், முழு அளவிலான ரஷ்ய ஆக்கிரமிப்பைத் தடுப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டதாகவும் ஜெலென்ஸ்கி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

 

காஸ்பியன் குழாய் கூட்டமைப்பின் ஊடாக OPEC+ உறுப்பினரான கஜகஸ்தான் 80 சதவீத எண்ணெய் ஏற்றுமதியை முன்னெடுக்கிறது. கடந்த வருடம் மட்டும் 68.6 மில்லியன் டன் எண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

3 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026