2026 பட்ஜெட் : மின்சார கட்டணம் குறைப்பு, எரிவாயு வரி உயர்வு!!
30 கார்த்திகை 2025 ஞாயிறு 15:55 | பார்வைகள் : 3729
2026ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் ஆய்வில், செனட் மின்சாரத்தால் வெப்பமடையும் குடும்பங்களின் கட்டணத்தை குறைத்து, எரிவாயு பயன்படுத்துபவர்களின் கட்டணத்தை அதிகரிக்கும் நடவடிக்கைக்கு வாக்களித்துள்ளது. எரிவாயு விலை குறைவாக உள்ளதால், இந்த மாற்றம் ஆக்கபூர்வமாக செயல்படும் என கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் மின்சாரத்தைப் பயன்படுத்தி வெப்பமடையும் குடும்பங்களின் வருடாந்திர மின்கட்டணம் 11 முதல் 45 யூரோ வரை குறையும். இதே நேரத்தில், எரிவாயுவைப் பயன்படுத்தி வெப்பமடையும் குடும்பங்களின் வருடாந்திர கட்டணம் 12 முதல் 80 யூரோ வரை (மாதத்திற்கு 1 முதல் 7 யூரோ வரை) அதிகரிக்கலாம் என செனட் நிதிக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், டீசல் B100 மற்றும் E85 எத்தனால் போன்ற இரண்டு உயிரியல் எரிபொருட்களுக்கு வழங்கப்பட்ட வரிச்சலுகைகளை ரத்து செய்யும் முன்மொழிவை செனட் நிராகரித்துள்ளது. இந்த நடவடிக்கை விவசாயிகள் மற்றும் தொழில்துறையினரிடமிருந்து கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. தேசிய சபை இதையே முன்பு நிராகரித்திருந்தாலும், நிதி மசோதாவின் இறுதி முடிவு இன்னும் உறுதி செய்யப்படாததால், நாடாளுமன்றத்தில் விவாதங்கள் டிசம்பர் நடுப்பகுதி வரை தொடரும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan