Paristamil Navigation Paristamil advert login

எரிபொருள் விலை உயர்வு!!

எரிபொருள் விலை உயர்வு!!

27 கார்த்திகை 2025 வியாழன் 14:30 | பார்வைகள் : 6292


ஜனவரி 1 முதல் எரிபொருள் விலைகள் லிட்டருக்கு 4 முதல் 6 சதம் வரை அதிகரிக்க உள்ளது. இதற்கு காரணம், 2005-ல் உருவாக்கப்பட்ட "ஆற்றல் சேமிப்பு சான்றிதழ்கள்" (CEE) திட்டத்தின் நிதி 6 பில்லியன் யூரோவிலிருந்து 8 பில்லியன் யூரோவை கடந்த அளவுக்கு அதிகரிக்கப்படுகின்றது. 

இந்தத் திட்டம் ஆற்றல் வழங்குநர்கள் மாசை குறைக்கும் நடவடிக்கைகளுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்பதைக் கட்டாயப்படுத்துகிறது, ஆனால் அதன் செலவு எரிபொருள் விலைகளில் பிரதிபலிக்கப்படுகிறது. UFIP தலைவர் ஒலிவியேர் கந்துவா, லிட்டருக்கு தற்போது 11 சதமாக உள்ள இந்தச் செலவு 1 ஜனவரி முதல் மேலும் 4 முதல் 6 சதமாக உயரும் என எச்சரித்துள்ளார்.

இந்த உயர்வு நுகர்வோரின் பில்களில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில், ஓட்டுநர்கள் சங்கம் இதை “ஏற்க முடியாத மறைமுக வரி” என விமர்சிக்கிறது. பொருளாதார அமைச்சகம் இந்தத் திட்டம் அடுத்தாண்டு விலைகளில் ஏற்படுத்தும் தாக்கத்தை கவனமாக கண்காணிப்பதாக தெரிவித்துள்ளது. 21 நவம்பர் நிலவரப்படி, டீசல் லிட்டருக்கு 1,697 யூரோவும், SP95-E10 பெட்ரோல் 1,707 யூரோவும் இருந்தன.

10 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026