2012 பிரச்சார நிதி மோசடி : சார்கோஸிக்கு ஒரு ஆண்டு சிறை உறுதி!!
26 கார்த்திகை 2025 புதன் 21:32 | பார்வைகள் : 3775
நிக்கோலா சார்கோஸி 2012ஆம் ஆண்டு தனது குடியரசுத் தலைவர் தேர்தல் பிரச்சாரத்தின் சட்டவிரோத நிதியுதவிக்காக வழங்கப்பட்ட ஒரு ஆண்டு சிறைத் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியதால், அவரது தண்டனையும் இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது சார்கோஸியின் இந்த வழக்கில் பிரான்சு சட்டத்தின் கீழ் இருந்த இறுதி மேல்முறையீட்டாகும். இந்த வழக்கின் மேல் முறையீட்டு விசாரணை 2026 மார்ச் 16 முதல் ஜூன் 3 வரையில் நடைபெற உள்ளது.
இந்த வழக்கில், இரட்டை பில் முறையின் மூலம் பிரச்சாரச் செலவுகள் அனுமதிக்கப்பட்ட வரம்பை விட இரட்டிப்பாக உயர்ந்திருந்தமை மறைத்திருந்துள்ளது. கூட்டங்களின் செலவுகள் அவரது கட்சியான UMP மேல் போலியான ஒப்பந்தங்களின் பெயரில் சுமத்தப்பட்டுள்ளன. சார்கோஸி தனது குற்றப்பொறுப்பை மறுத்தாலும், அவர் விரைவில் தண்டனை அமலாக்க நீதிபதியிடம் வர வேண்டியுள்ளது.
இதே நேரத்தில், சார்கோஸிக்கு எதிராக பல சட்ட நடைமுறைகள் தொடர்கின்றன. லிபிய நிதியுதவி சந்தேகங்கள் தொடர்பாக அவர் ஐந்து ஆண்டு சிறைத் தண்டனைக்கு ஆளாகி, சில வாரங்கள் Santé சிறையில் இருந்தார்; இந்த வழக்கின் மேல்முறையீடு 2026இல் நடைபெறும்.
"Paul Bismuth" எனப்படும் ஒலிப்பதிவு வழக்கில் ஒரு ஆண்டு மின்காப்புப் தண்டனையும் அவர் மீது உறுதிசெய்யப்பட்டுள்ளது. வயதை முன்னிட்டு அவர் தாக்கல் செய்த ஒரு மேல்முறையீட்டின் மூலம் பின்னர் அதை அகற்ற அனுமதி பெற்றார். அவர் மனித உரிமைகள் ஐரோப்பிய நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்; அது இன்னும் பரிசீலனையில் உள்ளது.
மேலும், லிபியாவுடன் தொடர்புடைய மற்றொரு வழக்கிலும், ரஷ்யாவில் அவரது ஆலோசனைச் செயல்பாடுகளிலும் செல்வாக்கு வர்த்தக சந்தேகங்கள் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan