Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

யாழில்.நண்பர்களுடன் கடலில் நீராட சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

யாழில்.நண்பர்களுடன் கடலில் நீராட சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

30 மார்கழி 2025 செவ்வாய் 12:36 | பார்வைகள் : 330


யாழ்ப்பாணம் தாளையடி கடலில் நண்பர்களுடன் நீராட சென்ற நிலையில் ,  காணாமல் போன இளைஞனின் சடலம் கரையொதுங்கியுள்ளது. 

ஆழியவளை பகுதியை சேர்ந்த ஜெசிந்தன் என்ற இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

கடந்த ஞாயிற்றுக்கிழமை நண்பர்களுடன் தாளையடி கடலில் நீராடிக்கொண்டிருந்த வேளை கடல் அலையில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போனார்.

இதனை அடுத்து கடந்த இரண்டு நாட்களாக இளைஞனை அப்பகுதியை சேர்ந்த கடற்தொழிலாளர்கள், கடலில் தேடிய நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இளைஞனின் சடலம் அப்பகுதியில் கரையொதுங்கியுள்ளது.

அதனை அடுத்து மருதங்கேணி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் சடலத்தை ஒப்படைத்துள்ளனர். 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்