Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

இலங்கையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவன் பலி

இலங்கையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவன் பலி

28 மார்கழி 2025 ஞாயிறு 17:19 | பார்வைகள் : 204


லுணுவில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தும்மோதர - போலவத்த பிரதான வீதியில் பெஸ்டஸ் பெரேரா மாவத்தை பகுதியில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மஹாவெவ, கொஸ்வாடிய பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய சமிந்து சிஹார மாரசிங்க   எனும் நாத்தாண்டியா, தம்மிஸ்சர தேசிய பாடசாலையில் க.பொ. உயர்தர வகுப்பில் கல்வி கற்று வந்த மாணவனே விபத்தில் உயிரிழந்துள்ளார் .

குறித்த மாணவன் சம்பவ தினத்தன்று லுணுவில பகுதியில் இருந்து பெஸ்டஸ் பெரேரா மாவத்தை நோக்கி பயணம் செய்துக்கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலுள்ள தொலைபேசி கம்பத்தில் மோதியுள்ளது.

விபத்தில் காயமடைந்த  மாணவனை  உடனடியாக மாரவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த போதிலும் அந்த மாணவன் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் லுணுவில பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்