Paristamil Navigation Paristamil advert login

பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறப்போவது இவரா?

பிக்பாஸில்  இந்த வாரம் வெளியேறப்போவது இவரா?

20 மார்கழி 2025 சனி 14:14 | பார்வைகள் : 200


பிக்பாஸில் இந்த வாரம் டான்ஸ் மாரத்தான் நடைபெற்ற நிலையில் அம்மாடி ஆத்தாடி டீம் வெற்றி பெற்ற நிலையில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஃப்ரீஸ் டாஸ்க்குக்கான ஆஃபரை ஆதிரை பெற்றுள்ளார்.

இந்த வாரம் முழுவதும் சாண்ட்ரா பிரச்சனையை தொடங்கி அழுது நாடகமாடவே, அனைத்து புரோமோவையும் ஆக்கிரமித்துவிட்டார்.

பிரஜன் வெளியேறிய பிறகு சாண்ட்ரா தனியாக இருந்து அனைவரிடம் பிரச்சனையில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் மற்றவர்கள் தன்னை விமர்சிப்பதாக கூறி சண்டை மேற்கொள்கிறார்.

இந்த வார இறுதியான இன்று விஜய்சேதிபதியின் ரோஸ்ட் சம்பவத்திற்காக ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.இந்த நிலையில், இந்த வாரம் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்த சாண்ட்ரா தான் வெளியேறுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் வோட்டிங் அடிப்படையில் FJ மற்றும் ஆதிரை கடைசியில் இருப்பதால் அவர்களில் ஒருவரும் வெளியேற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆதிரை டாஸ்க் வெற்றி பெற்றதாலும், மீண்டும் உள்ளே வந்த போட்டியாளர் என்பதாலும் உள்ளே இருக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்