Paristamil Navigation Paristamil advert login

வடக்கு பரிசில் அதிரடி சுற்றிவளைப்பு! - 15 பேர் கைது!!

வடக்கு பரிசில் அதிரடி சுற்றிவளைப்பு! - 15 பேர் கைது!!

20 மார்கழி 2025 சனி 07:00 | பார்வைகள் : 102


பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் பெரும் காவல்துறை படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 15 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

Gare du Nord நிலையம் முதல் Gare de l'Est நிலையம் வரையான பகுதிகளில் டிசம்பர் 18 வியாழக்கிழமை இந்த நடவடிக்கை இடம்பெற்றது. 150 வரையான காவல்துறையினர் அதிரடியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். குறிப்பாக Rue Marx-Dormoy வீதியில் உள்ள கடைகள் சோதனையிடப்பட்டன. அதன்போது ஏராளமான சட்டவிரோத பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

சுவீங்கம் முறையில் தயாரிக்கப்பட்ட 76 பெட்டிகள் சிகரெட், 28 சிகரெட் பெட்டிகள், அனுமதியின்றி வைத்திருந்த கைத்துப்பாக்கி, போலி பணத்தாள்கள், சட்டவிரோத வதிவிட உரிமை கொண்டவர்கள் என பல சட்டவிரோத நடவடிக்கைகள் பலவற்றை கட்டுப்படுத்தினர்.

மொத்தமாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

🔥 இன்றைய சிறப்பு சலுகை

வர்த்தக‌ விளம்பரங்கள்