நாளை முதல் SNCF மற்றும் RATP கட்டுப்பாட்டாளர்களுக்கு உடலில் கேமரா அணியும் அனுமதி!!
18 மார்கழி 2025 வியாழன் 14:51 | பார்வைகள் : 1211
மார்ச் மாதத்தில் நிறைவேற்றப்பட்ட போக்குவரத்து பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில், வெள்ளிக்கிழமை முதல் SNCF மற்றும் RATP நிறுவனங்களின் கட்டுப்பாட்டாளர்கள் உடலில் அணியும் கேமராக்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த நடவடிக்கை தடுப்பு மற்றும் அச்சுறுத்தலைக் குறைக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகிறது. பயணிகளின் அல்லது பணியாளர்களின் பாதுகாப்புக்கு உடனடி ஆபத்து ஏற்பட்டும் சூழ்நிலைகளில், 11,000-க்கும் மேற்பட்ட முகவர்கள் தங்களது பணிநடவடிக்கைகளை பதிவு செய்ய முடியும்.
வெளிப்படையாகக் காணப்படும் உடலில் அணியும் கேமராவில் பதிவு தொடங்கும் போது பொதுவாக சம்பந்தப்பட்டவர்களுக்கு வாய்மொழியாக அறிவிக்க வேண்டும். ஆனால் ஒருவரின் உயிர் அல்லது உடல் பாதுகாப்புக்கு உடனடி ஆபத்து உள்ளது என கருதப்படும் சூழ்நிலையில் இந்த அறிவிப்பு இந்த வழங்கப்படாமல் இருக்கலாம். பதிவு செய்யப்பட்ட காணொளிகள் 30 நாட்கள் வரை சேமிக்கப்பட்டு, பின்னர் தானாகவே அழிக்கப்படும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Ajouter
Annuaire
Scan