Paristamil Navigation Paristamil advert login

ரஷ்ய பிராந்தியத்தில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் - நகரில் முதல் உயிரிழப்பு என பதிவு

ரஷ்ய பிராந்தியத்தில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் - நகரில் முதல் உயிரிழப்பு என பதிவு

18 மார்கழி 2025 வியாழன் 15:18 | பார்வைகள் : 180


ரஷ்யாவின் ரோஸ்டோவ் பிராந்தியத்தில் உக்ரேனிய ட்ரோன் தாக்குதலில் மூவர் உயிரிழந்தனர்.

தெற்கு ரஷ்ய பிராந்தியமான ரோஸ்டோவில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.

டான் நதிக்கரையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு சரக்குக் கப்பல் மீது ட்ரோன்கள் விழுந்ததில், இரண்டு பணியாளர்கள் கொல்லப்பட்டனர். மேலும், மூவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதில் இருந்து, ட்ரோன் மூலம் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவே முதல் உயிரிழப்பு என்று மேயர் அலெக்ஸ்சாண்டர் ஸ்க்ரியாபின் தெரிவித்தார்.

அதேபோல் மற்றொரு ட்ரோன் தாக்குதலில், படாய்ஸ்க் நகரில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், 6 பேர் காயமடைந்ததாகவும் ஆளுநர் ஸ்ல்யூசர் தெரிவித்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்