Paristamil Navigation Paristamil advert login

2026ஆம் ஆண்டு எப்படி இருக்கும்? பாபா வங்காவின் கணிப்பு

2026ஆம் ஆண்டு எப்படி இருக்கும்? பாபா வங்காவின் கணிப்பு

17 மார்கழி 2025 புதன் 13:18 | பார்வைகள் : 115


இளவரசி டயானாவின் மரணம் முதல் கோவிட் வரையிலான பல்வேறு விடயங்களை முன்கூட்டியே துல்லியமாகக் கணித்த பாபா வங்கா, 2026ஆம் ஆண்டைக் குறித்து என்ன கணித்துள்ளார் என்று பார்க்கலாம்.

2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் கணிப்புகள்

2026ஆம் ஆண்டு போர்கள் நிறைந்த ஆண்டாக இருக்கும், குறிப்பாக, ஐரோப்பா தொடர்பில் போர்கள் நடைபெறும் என்றும், அவை வழக்கமாக போர்களாக மட்டும் இல்லாமல், நீண்டகால புவிஅரசியல் சார்ந்த, அரசியல் பிளவுகளை ஏற்படுத்தும் மற்றும் நாடுகளுக்கிடையிலான கூட்டணிகளை மாற்றும், அதிகரிக்கும் ராணுவ மோதலாகவும் இருக்கலாம் என பாபா கணித்துள்ளார்.

அவரது கணிப்புகள், தைவான், தெற்கு சீனக்கடல் மற்றும் சீன இந்திய எல்லை தொடர்பிலான பதற்றங்களைக் குறிக்கலாம் என கருதப்படுகிறது.

பாபாவின் கணிப்புகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள மற்றொரு விடயம் AI என்னும் செயற்கை நுண்ணறிவு மனித குலத்தை மேற்கொள்ளும், அல்லது கட்டுப்படுத்தும் என கணித்துள்ளார் பாபா.

வேறுவகையில் கூறினால், ரோபோக்கள் மனிதர்களின் வேலை, உறவுகள் மற்றும் உயிரையும் பறிக்கக்கூடும் என எச்சரித்துள்ளார் பாபா.

2026ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், ஏலியன்களுடன் உலகம் முதன்முறையாக தொடர்புகொள்ளும் என்றும் கணித்துள்ள பாபா, பெரிய விண்வெளிக்கப்பல் ஒன்று வரும் என்றும் அது நம்முடன் தொடர்புகொள்ளும் என்றும் கூறியுள்ளார்.

விடயம் என்னவென்றால், 3I/ATLAS என்னும் ஒரு மர்மப் பொருள் பூமியை நோக்கி வருவதாக ஏற்கனவே அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

உலகின் பல பாகங்களில், நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள் மற்றும் பயங்கர பருவநிலை மாற்றங்கள் போன்ற இயற்கைப் பேரழிவுகள் தாக்கப்போவதாக கணித்துள்ளார் பாபா.

பூமியின் நிலப்பரப்பில் 7 முதல் 8 சதவிகிதம் சேதமடையலாம் என்றும் அதனால் சூழல் மண்டலம் முதல் உள்கட்டமைப்பு வரை பல விடயங்கள் அழியக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார் பாபா.

2026ஆம் ஆண்டில், ரஷ்யாவிலிருந்து வரும் ஒரு தலைவர் உலக தலைவராக உருவெடுப்பார் என்று பாபா கூறியதாக அவரது கூற்றுக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

பலர், அவர் கணித்துள்ள நபர், ரஷ்ய ஜனாதிபதி புடினாக இருக்கக்கூடும் என கருதுகிறார்கள்.

வர்த்தக‌ விளம்பரங்கள்