Paristamil Navigation Paristamil advert login

அவுஸ்திரேலியாவின் சமூக ஊடகத் தடை

அவுஸ்திரேலியாவின் சமூக ஊடகத் தடை

10 மார்கழி 2025 புதன் 17:38 | பார்வைகள் : 149


அவுஸ்திரேலியாவின் சமூக ஊடகத் தடைக்கு ஜேர்மன் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 

அவுஸ்திரேலிய அரசு, 16 வயதிற்குக் குறைவானவர்களுக்கு சமூக ஊடக பயன்பாட்டைத் தடைசெய்யும் புதிய சட்டத்தை இன்று (டிசம்பர் 10) முதல் அமுல்படுத்தியுள்ளது.

 

இதன்படி, TikTok, Snapchat, YouTube, Instagram, Facebook போன்ற முக்கிய தளங்கள், 16 வயதிற்குக் குறைவான பயனர்களின் கணக்குகளை முடக்கப்படும்.

 

விதிமுறையை மீறினால், நிறுவனங்களுக்கு 49.5 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் வரை அபராதம் விதிக்கப்படும்.

 

இந்த நடவடிக்கையை ஜேர்மனியில் உள்ள மாணவர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

 

ஜேர்மன் தேசிய மாணவர் மாநாட்டின் முன்னாள் செயலாளர் குவென்டின் கேர்ட்னர் (Quentin Gartner) கூறியதாவது: “இளம் தலைமுறைக்கு முதலில் தேவையானது திறன்களை கற்றுக்கொடுத்தல். தடை விதிப்பது பிரச்சினைக்கு தீர்வாகாது. சமூக ஊடகங்களை எவ்வாறு பொறுப்புடன் பயன்படுத்துவது என்பதை கற்பிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

 

அவர் மேலும், பள்ளிகளில் சிறப்பு பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டு, மாணவர்களுக்கு ஆரோக்கியமான உறக்கம், சமூக ஊடகத்தின் செயல்முறை, தவறான தகவல்களை அடையாளம் காணும் திறன் போன்றவற்றை கற்பிக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளார்.

 

“எங்கள் திரை நேரம் தீங்கு விளைவிப்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆனால், அதை சமாளிக்க வழிகாட்டுதல் தேவைப்படுகிறது” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

ஜேர்மனியில் தற்போது, 13 முதல் 16 வயது குழந்தைகள் பெற்றோர் அனுமதியுடன் மட்டுமே சமூக ஊடகங்களைப் பயன்படுத்தலாம்.

 

இதனால், அவுஸ்திரேலியாவின் முழுமையான தடை நடவடிக்கை, கல்வி மற்றும் சமூக வல்லுநர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தச் சம்பவம், உலகளவில் சமூக ஊடகப் பயன்பாட்டின் தாக்கம் மற்றும் இளம் தலைமுறையை பாதுகாக்கும் விதிமுறைகள் குறித்து புதிய விவாதங்களை தூண்டியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்