சமூக வீடுகளுக்கு தொழில் அடிப்படையான முன்னுரிமை !!
22 கார்த்திகை 2025 சனி 14:50 | பார்வைகள் : 4255
சமூக வீடுகள் வழங்கப்படுவதில் இப்போது “முதன்மை வரிசை தொழிலாளர்களான” தாதிகள், ஆசிரியர்கள் போன்றவர்கள் முன்னுரிமை பெறுகின்றனர். 26 வயதான தாதி ஆக்செல், தனது மருத்துவமனைக்கு அருகில் புதிய சமூக வீட்டைப் பெற்றதால், குறைந்த வாடகையில் வாழ்ந்து, தொழிலில் கவனம் செலுத்த முடிந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
பரிஸ் மருத்துவமனைகள் 500 வீடுகளை இத்தகைய பணியாளர்களுக்காக ஒதுக்கியுள்ளன. பொது நிறுவனங்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் 12,000 யூரோ செலுத்தினாலும், இது சட்டப்படி தகுதியானவர்களுக்கு அளிக்கப்படும் நியாயமான முன்னுரிமை என விளக்குகிறது.
வீட்டு பற்றாக்குறை அதிகரித்துள்ள நிலையில், சில பொது நிறுவனங்கள் புதிய வீடுகளை நேரடியாக கட்டத் தொடங்கியுள்ளன. பரிஸில் உள்ள RATP தனது தொழிற்சாலை வளாகங்களை புதுப்பித்து, அதில் சமூக வீடுகளை உருவாக்கி வருகிறது. அவற்றில் குறைந்தது 20% RATP பணியாளர்களுக்காக ஒதுக்கப்படும்.
இரவு நேர வேளைகளில் பணிபுரிபவர்களுக்கு வீட்டுக்கும் பணியிடத்திற்கும் இடையிலான தூரம் முக்கியம் என்பதால், இந்த வீடுகள் பணியாளர்களை ஈர்க்கும் ஒரு பெரிய நன்மையாகக் கருதப்படுகின்றன. RATP அடுத்த 10 ஆண்டுகளில் 2,000க்கும் மேற்பட்ட வீடுகளை உருவாக்க இலக்கு வைத்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan