பாகிஸ்தானில் தொழிற்சாலையில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடி விபத்து - 16 பேர் பலி
22 கார்த்திகை 2025 சனி 10:27 | பார்வைகள் : 2347
பாகிஸ்தானில் பசை தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடிப்பில் குறைந்தது 16 பேர் உயிரிழந்ததுடன், ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
வெடிப்பின் தாக்கத்தால் தொழிற்சாலை இடிந்து சரிந்ததோடு அருகிலுள்ள வீடுகளிலும் தீக்காயங்கள் ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வெடிப்பு வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் (00:00 GMT) பஞ்சாப் மாகாணத்தின் பெசலாபாத் நகரின் மலிக்பூர் பிரதேசத்தில் இடம்பெற்றது.
தொழிற்சாலையின் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட எரிவாயு கசிவு வெடிப்புக்கு காரணமாக இருந்ததாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதிகாரிகள் தொழிற்சாலை மேலாளரை கைது செய்துள்ளதுடன், சம்பவத்திற்குப் பின்னர் ஓடிய தொழிற்சாலை உரிமையாளரை தேடும் பணி தொடர்வதாக தெரிவித்துள்ளனர்.
வெடிப்பின் தாக்கத்தால் தொழிற்சாலையின் கூரை தரைக்கு சரிந்தது. அதேசமயம், அருகிலுள்ள சில வீடுகளும் சேதமடைந்து, குறைந்தது மூன்று வீடுகளில் தீப்பற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலும் தொழிற்சாலை அருகே வசித்த பொதுமக்கள் என்றும், ஆறு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நகராட்சிப்பணியாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை தோண்டி மீட்டனர். காயமடைந்த ஏழு பேர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan