Paristamil Navigation Paristamil advert login

"ஒரு கைதியின் நாட்குறிப்பு": தனது அடுத்த புத்தகத்தின் வெளியீட்டை அறிவித்த சர்கோசி!!

"ஒரு கைதியின் நாட்குறிப்பு": தனது அடுத்த புத்தகத்தின் வெளியீட்டை அறிவித்த சர்கோசி!!

21 கார்த்திகை 2025 வெள்ளி 15:58 | பார்வைகள் : 6526


முன்னாள் குடியரசுத் தலைவர் நிக்கோலா சர்கோஸி, லிபியா விவகாரத்தில் விதிக்கப்பட்ட தண்டனையால் பரிசின் ல சாந்தே சிறையில் மூன்று வாரங்கள் இருந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு «ஒரு சிறைக்கைதியின் தினசரி குறிப்புகள்» « Le journal d’un prisonnier » என்ற தனது புதிய நூலை டிசம்பர் 10 அன்று வெளியிட உள்ளார். 

சிறையில் மௌனம் இல்லாத தொடர்ச்சியான சத்தம் இருந்தாலும், அது தனது உள்ளார்ந்த வாழ்க்கையை வலுப்படுத்தியதாக அவர் எழுதியுள்ளார். 2007 தேர்தல் பிரச்சாரத்திற்கான லிபியாவில் இருந்து மறைமுக நிதி கோர முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட சார்கோஸி, ஐந்து ஆண்டு சிறைத்தண்டனையும் அபராதமும் பெற்றுள்ளார். அவர் இந்த தீர்ப்பை «வெறுப்பு» காரணமாக ஏற்பட்டது எனக் கூறி மேல்முறையீடு செய்துள்ளார்.

சர்கோஸி தனது சிறைவாசத்தை «மிகவும் கடினமானதும் சோர்வூட்டும் ஒன்றாக விவரித்துள்ளார்; இது «ஒரு கனவுக்கொடை» என்றும் விளக்கியுள்ளார். இருந்தபோதும், சிறை அதிகாரிகள் காட்டிய மனிதாபிமானம் இந்த அனுபவத்தை தாங்கக்கூடியதாக மாற்றியது என அவர் நன்றியுடன் தெரிவித்துள்ளார்.. அவரது புதிய நீதிமன்ற விசாரணை 2026 மார்ச் 16 முதல் ஜூன் 3 வரை நடைபெற உள்ளது.

12 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026