தைவானுக்கு NASAMS ஏவுகணை விற்பனை செய்யும் அமெரிக்கா
19 கார்த்திகை 2025 புதன் 15:37 | பார்வைகள் : 184
அமெரிக்கா தைவானுக்கு 700 மில்லியன் டொலர் மதிப்பிலான NASAMS ஏவுகணைகளை விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.
தைவானில் பாதுகாப்பு திறனை வலுப்படுத்தும் நோக்கில், அமெரிக்கா 700 மில்லியன் டொலர் மதிப்பிலான NASAMS (National Advanced Surface-to-Air Missile Sysytem) ஏவுகணை அமைப்புகளை விற்பனை செய்யவுள்ளது.
இந்த ஒப்பந்தம் RTX நிறுவனத்துடன் கையெழுத்திடப்பட்டுள்ளது.
2031 பிப்ரவரி மாதத்திற்குள் இந்த ஏவுகணைகளின் உற்பத்தி மற்றும் விநியோகம் நிறைவடையும் என Pentagon அறிவித்துள்ளது.
NASAMS அமைப்பு, நடுத்தர தூர வான்வழி பாதுகாப்பை வழங்கும் திறன் கொண்டது.
உக்ரைனில் ரஷ்யா தாக்குதல்களை எதிர்கொள்வதில் இந்த அமைப்பு வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டதால், தைவானின் பாதுகாப்பிற்கு இது முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது.
இந்த ஒப்பந்தம், அமெரிக்காவின் “rock-solid commitment” எனப்படும் தைவானுக்கான உறுதியை மீண்டும் வலியுறுத்துகிறது.
கடந்த வாரம், அமெரிக்கா 330 மில்லியன் டொலர் மதிப்பிலான போர் விமானங்கள் மற்றும் பாகங்கள் விற்பனைக்கு ஒப்புதல் அளித்திருந்தது. இதனால், ஒரே வாரத்தில் தைவானுக்கு 1 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஆசிய-பசிபிக் பகுதியில் தற்போது NASAMS அமைப்பை அவுஸ்திரேலியா மற்றும் இந்தோனேஷியா மட்டுமே பயன்படுத்துகின்றன. தைவானுக்கு வழங்கப்படுவது, அந்த நாட்டின் வான்வழி பாதுகாப்பை பெரிதும் மேம்படுத்தும்.
இதற்கிடையில், சீனா தொடர்ந்து தைவானை தனது பகுதியாகக் கருதி, “மீண்டும் இணைப்போம்” என வலியுறுத்தி வருகிறது.
சீனாவின் கடற்படை மற்றும் விமானப்படை நடவடிக்கைகள் தைவானை அழுத்தம் கொடுக்கின்றன. இதனால், தைவான் தனது பாதுகாப்புத் திறனை அதிகரிக்க உள்நாட்டு நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்காவின் இந்த ஆயுத விற்பனை, சீனாவின் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தும் நிலையில், தைவானுக்கு வலுவான பாதுகாப்பு ஆதரவாக அமைகிறது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan