Paristamil Navigation Paristamil advert login

ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கு புதிய எச்சரிக்கை! அத்துமீறலை எப்படி தடுப்பது?

ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கு புதிய எச்சரிக்கை! அத்துமீறலை எப்படி தடுப்பது?

7 கார்த்திகை 2025 வெள்ளி 12:20 | பார்வைகள் : 142


ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களுக்கு மிக முக்கியமான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கூகுள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் கண்டறியப்பட்ட உயர் தீவிர பாதுகாப்பு குறைப்பாடு காரணமாக  ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கு இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ்(CERT-In) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த உயர் தீவிர பாதுகாப்பு குறைபாட்டை பயன்படுத்தி கொள்பவர்கள் பயனர்களின் ஸ்மார்ட்போன் சாதனங்களில் இருந்து உயர்த்தப்பட்ட சலுகைகள் பெறலாம் அல்லது குறீயீடுகளை இயக்கலாம் என்ற அச்சுறுத்தல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அங்கீகரிக்கப்படாத தரவு அணுகல்கள், சாதனத்தின் ஸ்திரமின்மை மற்றும் செயலிழப்புகள், மற்றும் தரவு மீறல்கள் ஆகிய பாதிப்புகளுக்கு உள்ள பாதிக்கப்பட்டுள்ளன.

இவை கடந்த கால ஆண்ட்ராய்டு OS பதிப்புகளில் இருந்து தற்போதைய ஆண்ட்ராய்டு OS பதிப்புகள் வரை பாதிக்கப்படுகின்றன.

அவற்றின் படி,  Android 13, Android 14, Android 15, Android 16 இந்த ஆண்ட்ராய்டு OS பதிப்பு கொண்ட ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் பயனர்கள் சைபர் தாக்குதல்களுக்கு ஆளாக நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த உயர் தீவிர பாதுகாப்பு குறைபாட்டை பயன்படுத்தி நடத்தப்படும் அத்துமீறல்களை சமாளிக்க கூகுள் மற்றும் ஸ்மார்ட்போன் சாதன உற்பத்தியாளர்கள் வெளியிடும் சமீபத்திய Android பாதுகாப்பு இணைப்புகளை நிறுவது அத்தியாவசியமாகும்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்