Paristamil Navigation Paristamil advert login

உக்ரைன் நடத்திய தீவிர ட்ரோன் தாக்குதல்! வெற்றிகரமாக முறியடித்த ரஷ்யா

உக்ரைன் நடத்திய தீவிர ட்ரோன் தாக்குதல்! வெற்றிகரமாக முறியடித்த ரஷ்யா

7 கார்த்திகை 2025 வெள்ளி 11:20 | பார்வைகள் : 184


உக்ரைன் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 261 ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

மேலும், உக்ரைன் நடத்திய இந்த தீவிரமான ட்ரோன் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்து இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், தாக்குதலுக்கு ஏவப்பட்ட 261 ஆளில்லா விமானங்களையும், இரண்டு வழிகாட்டப்பட்ட வான் குண்டுகளையும் இடைமறித்து அழித்து இருப்பதாக தெரிவித்துள்ளது.

இதுவரையிலான போர் மோதலில் அழிக்கப்பட்டுள்ள உக்ரைனிய இராணுவ சாதனங்களின் மொத்த புள்ளிவிவர பட்டியலையும் ரஷ்ய அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, இதுவரை 95,320 ட்ரோன்கள், 668 போர் விமானங்கள், 283 உலகவானூர்திகள் மற்றும் 1609 பலதரப்பட்ட ஏவுகணை அமைப்பு ஆகியவற்றை அழித்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்