ஈரான் மீது பொருளாதாரத் தடை - ஐக்கிய நாடுகள் சபை

29 புரட்டாசி 2025 திங்கள் 12:15 | பார்வைகள் : 176
அணுசக்தி திட்டங்களைக் கைவிட மறுக்கும் ஈரான் மீது ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
2015 ஆம் ஆண்டு உலக வல்லரசுகளுடன் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது.
ஆனால் ஒப்பந்த விதிகளை மீறியதற்காக, அதே ஒப்பந்தத்தில் இடம்பெற்ற 'ஸ்னாப்பேக்' (Snapback) என்ற அம்சம் மூலம் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதாவது இந்த ஒப்பந்தம் செய்வதற்கு முன் ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த தடைகள் 10 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
தற்போது அமலுக்கு வந்துள்ள இந்தத் தடையால் ஈரானின் வெளிநாட்டுச் சொத்துகள் முடக்கப்படும், ஆயுத விற்பனை ஒப்பந்தங்கள் நிறுத்தப்படும்.
அத்துடன், பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்களை மேம்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும்.
முன்னதாக ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிப்பதற்காக பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கொண்டு வந்த தீர்மானம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையிலுள்ள உள்ள 15 நாடுகளின் வாக்கெடுப்புக்காக வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமுல்படுத்துவதை ஆறு மாதங்கள் தாமதப்படுத்தக் கோரி ரஷ்யா மற்றும் சீனா கொண்டு வந்த வரைவு தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை நிராகரித்தது.
இதைத்தொடர்ந்து இன்று முதல் பொருளாதாரத் தடைகள் அமலுக்கு வந்தன. ஆனால் தங்கள் மீது தடை விதிக்க ஐக்கிய நாடுகள் சபைக்கு உரிமை இல்லை என்றும் இந்த தடைகளால் தங்களுக்கு எந்த பொருளாதார பாதிப்புகளும் இருக்காது என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1