Paristamil Navigation Paristamil advert login

நிக்கோலா சர்கோஷிக்கு சிறை! - நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் தேடப்படுகிறார்!!

நிக்கோலா சர்கோஷிக்கு சிறை! - நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் தேடப்படுகிறார்!!

27 புரட்டாசி 2025 சனி 06:00 | பார்வைகள் : 379


முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சர்கோஷி அவர்களுக்கு ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, தீர்ப்பளித்த நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. கொலை மிரட்டல் விடுத்த நபர் தேடப்பட்டு வருகிறார்.

நீதிபதிகளின் சங்கம் (syndicale des magistrats) கொலை மிரட்டலுக்கு எதிரான தங்களது கடுமையான கண்டனத்தை பதிவு செய்ததோடு, விசாரணைகள் மேற்கொண்டு குற்றவாளி கைது செய்யப்படவேண்டும் எனவும் தெரிவித்து, வழக்கும் தொடுத்தனர்.

நீதித்துறைக்கும் எதிராகவும், நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கருத்துக்கள் சொல்வதும்,, நீதிமன்றத்தில் வழக்குகள் விசாரணைகள் இடம்பெறும் போது அது தொடர்பில் பொது வெளியில் கருத்துக்கள் வெளியிடுவதும் சட்டப்படி குற்றமாகும்.

குறைந்தது இரண்டு தொடக்கம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 75,000 யூரோக்கள் குற்றப்பணமும் அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்