புகலிட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பிறகும், "சட்டம் என் பக்கம் இருக்க வேண்டும்" என்று ஆர்வலர் பால் வாட்சன் கூறுகிறார்!!

24 புரட்டாசி 2025 புதன் 13:27 | பார்வைகள் : 668
போல் வாட்சன், உயிர்களை காக்கும் Sea Shepherd எனும் அமைப்பின் நிறுவனர், தனது அரசியல் தஞ்சம் கோரிய மனுவை பத்திரிக்கையாக ஒப்புக்கொள்ளாமை குறித்து பிழை செய்துள்ளதாக பிரான்ஸ் மீது குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் கடந்த ஐம்பது ஆண்டுகளாக கடலில் சட்டவிரோத செயல்களுக்கு எதிராக போராடி வந்தார். ஆனால் OFPRA அவரின் சில நடவடிக்கைகள் கேள்விக்குறியாக இருப்பதாகக் கூறி, அவரது தஞ்சக் கோரிக்கையை நிராகரித்துள்ளது.
ஜப்பான் தொடர்ந்து தன்னை கைது செய்து நாடு கடத்த விரும்புவதாகவும், எனவே கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் திரும்புவதில் தான் பாதுகாப்பாக இல்லை எனவும் பால் வாட்சன் தெரிவித்துள்ளார். முன்னர் ஜூன் மாதத்தில் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அவரை பிரான்சில் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதாக வாக்கு அளித்திருந்தாலும், தற்போதைய முடிவு அவரை ஆபத்தில் ஆழ்த்தும் என அவரது வழக்கறிஞர் எச்சரித்துள்ளார்.
பால் வாட்சன், இன்னும் ஜனாதிபதி மக்ரோன் தன்னோடு நியாயமாக நடப்பார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.