வான்வழி அச்சுறுத்தல்: பிரான்ஸ் ட்ரோன் ஊடுருவலுக்கு தயாரா?
23 புரட்டாசி 2025 செவ்வாய் 21:27 | பார்வைகள் : 4794
பிரான்ஸின் வான்வழி மீது வெளிநாட்டு ட்ரோன்கள் ஊடுருவும் அபாயம் நிலவுகிறது. அணு மையங்கள், அரசியல் கட்டடங்கள் போன்ற முக்கிய இடங்கள் பறக்கத் தடை செய்யப்பட்டிருந்தாலும், கடந்த காலத்தில் சில அமைப்புகள் அந்த தடையை மீறி செயல்பட்டுள்ளன.
விமான நிலையங்கள் சில ட்ரோன் கண்டறியும் உபகரணங்களைக் கொண்டுள்ளன; மேலும் சில விரைவில் பொருத்தப்பட உள்ளன. விமானப்படை 70 ராடார்களுடன் 24 மணி நேரமும் வானத்தை கண்காணிக்கிறது. பெரிய ட்ரோன்கள் எதிர்பார்க்கப்படும் போது, பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன; சிறிய ட்ரோன்கள் Signal Jammer-கள் மூலம் செயலிழக்கச் செய்யப்படுகின்றன.
உள்ளூர் அதிகாரிகளும் தங்களுடைய பாதுகாப்பு கருவிகளை வைத்துள்ளனர். வட பிரான்ஸில் உள்ள ஒரு நிறுவனம், நீண்ட மற்றும் குறுகிய தூர ட்ரோன் செயற்குழப்ப கருவிகளை உருவாக்குகிறது. இந்த டிரோன்களின் வளர்ச்சிக்கு ஏற்ப, பாதுகாப்பு தொழில்நுட்பங்களும் தொடர்ந்து மேம்படுத்தப்படுகின்றன. தற்போது, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வான்வழி பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan