வருமான வரி உயர்வு: சமூக நல உதவிகள் இழப்புக்குள்ளாகும் அபாயம்!!
15 ஐப்பசி 2025 புதன் 14:12 | பார்வைகள் : 8087
2026 ஆம் ஆண்டு வருமான வரிக்கான அளவுகோல் உறைய வைக்கப்படுவதால், இதுவரை வரி கட்டாத 2 லட்சம் குடும்பங்கள் முதல் முறையாக வரி செலுத்த வேண்டிய நிலைக்கு உட்படுவார்கள்.
அவர்கள் வருமானம் €11,498 க்கும் மேல் இருந்தால், 11% வரி விதிக்கப்படும். இது குறைந்த தொகையாக இருக்கலாம், ஆனால் இதனால் அவர்கள் சில சமூக நல உதவிகளை இழக்க நேரிடலாம், ஏனெனில் அவை வரிவிலக்கு பெற்றவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
மேலும், ஏற்கனவே வரி கட்டும் குடும்பங்கள், குறிப்பாக வரி நிலையின் எல்லையில் இருப்பவர்கள், அதிக வருமானம் அடைந்தால் அதிக வரி கட்ட வேண்டியிருக்கும். அவர்கள் வருமானம் €29,315 ஐ கடந்தால், அதற்கு மேற்பட்ட தொகைக்கு 30% வரி விதிக்கப்படும். இந்த நடவடிக்கையின் மூலம் அரசுக்கு €1.9 பில்லியன் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் நாடாளுமன்ற விவாதங்களில் இந்த முடிவில் மாற்றம் வரக்கூடும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan