லண்டனில் பாலஸ்தீன குழுவுக்கு ஆதரவாக போராட்டம்- 175 பேர் அதிரடி கைது
4 ஐப்பசி 2025 சனி 19:50 | பார்வைகள் : 2011
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக லண்டனில் நடந்த போராட்டத்தில் 175 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தடை செய்யப்பட்ட பாலஸ்தீன குழுவின் நடவடிக்கைக்கு ஆதரவாக லண்டனில் நடைபெற்று வரும் போராட்டத்தில் இதுவரை 175 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை லண்டன் பெருநகர காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
மேற்கொள்ளப்பட்ட இந்த கைது நடவடிக்கைகள் பல்வேறு சம்பவங்களின் அடிப்படையில் நடைபெற்றுள்ளது.
அதில் 04-10-2025 வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில் மீது பதாகைகள் விரித்த சம்பவமும் அடங்கும்.
கைது செய்யப்பட்ட பல தரப்பட்ட மக்களில் மதகுரு ஒருவரும், பார்வையற்ற நபர் மற்றும் அவரது மனைவி ஒருவரும் அடங்குவர்.
டிரஃபால்கர் சதுக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பொலிஸாரின் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan