Champ-de-Mars : இளம்பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய ஒருவர் கைது!!
.jpg)
27 ஆவணி 2025 புதன் 07:00 | பார்வைகள் : 1785
இளம்பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பரிஸ் 7 ஆம் வட்டாரத்தின் Champ-de-Mars பகுதியில் (ஈஃபிள் கோபுரம் அருகே) இச்சம்பவம் திங்கட்கிழமை செவ்வாய்க்கிழமைக்கு உட்பட்ட நள்ளிரவில் இடம்பெற்றுள்ளது. 32 வயதுடைய யுக்ரேனிய நாட்டு குடியுரிமை கொண்ட பெண்ணை நபர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுளர்.
30 வயதுடைய லிபிய நாட்டு குடியுரிமை கொண்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் போலியான ஆவணங்கள் இருந்ததாகவும், அவர் பொய்யான தகவல்களை தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.